சென்னையில் 4 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை

சென்னையில் நான்கு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
சென்னையில் 4 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை
x
சென்னையில் நான்கு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையில்  நுங்கம்பாக்கம்,  சேத்துப்பட்டு, ராயப்பேட்டை,கோடம்பாக்கம, கிண்டி, எழும்பூர், திருவல்லிக்கேணி , பட்டினப்பாக்கம் , சைதாப்பேட்டை, மைலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

சேலத்தில் மழை - மக்கள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல்லில் திடீரென மழை - மக்கள் மகிழ்ச்சி 

நாமக்கலில் கடந்த ஒரு சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நிலையில்,எதிர்பாராத விதமாக பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து அங்கு குளிர்ச்சி நிலவியது. இதனால் நாமக்கல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளூரில் மிதமான மழை 

திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம், ஆரணி, மீஞ்சூர் செங்குன்றம் , புழல் உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்தது.இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து அங்கு குளிர்ச்சிகரமான சூழல் நிலவுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்