ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் : கண்ணீர் விட்டு அழுது பணத்தை மீட்டுச் சென்ற திருமண வீட்டார்

திருமணத்துக்கு நகை வாங்க வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். கண்ணீர் விட்டு கதறி அழுது, அவர்கள் பணத்தை மீண்டும் பெற்றுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் : கண்ணீர் விட்டு அழுது பணத்தை மீட்டுச் சென்ற திருமண வீட்டார்
x
வேலூரில் தேர்தல் விதி அமலில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 
அதன்படி, குடியாத்தம் நோக்கி வந்த ஒரு காரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி 2 லட்ச ரூபாய் கொண்டு வந்தது  தெரியவந்தது.இதனையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது நடத்திய விசாரணையில் பணம் கொண்டு வந்தவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதும், திருமணத்துக்காக நகை வாங்க வந்ததாகவும் கூறியுள்ளனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் தர மறுத்த நிலையில் அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பணம் இல்லாமல் வீட்டுக்கு போகமாட்டோம் என அவர்கள் அடம் பிடிக்க, அவர்களிடம் பணத்தை வட்டாட்சியர் ஒப்படைத்தார். பணம் பறிமுதல்.. திருமண வீட்டார் கண்ணீர் விட்டு கதறி அழுகை என வட்டாட்சியர் அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்