இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்லூரியில் இலவச சீட்டு - ஏ.சி.சண்முகம்
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இஸ்லாமிய மக்கள் அணியும் குல்லாவை அணிந்தபடி வாக்கு சேகரித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் , சித்தூர் கேட், தரணம் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், இஸ்லாமிய மக்கள் அணியும் குல்லாவை அணிந்தபடி வாக்கு சேகரித்தார். ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது ஜான் உள்ளிட்டோரும் அவருக்காக வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய முகமது ஜான், சிறுபான்மையினரில் ஒருவரான தம்மை ராஜ்யசபா உறுப்பினராக்கியுள்ள அ.தி.மு.க. அரசு என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும் என்றும் கூறினார். ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமான கல்லூரியில் ஆண்டுதோறும், இஸ்லாமிய மாணவர்கள் 110 பேருக்கு இலவச சீட்டு வழங்கப்படும் என்று கூறி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Next Story