"சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
x
சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க இருப்பதாக கூறினார். சென்னையில் 80 பேருந்துகளும், மதுரை மற்றும் கோவையில் தலா 10 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார் .மொத்தமாக 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது  என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே போக்குவரத்து துறை தொடர்பான கொள்ளை விளக்க குறிப்பில், பேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்