வங்கி ஏ.டி.எம்.மை உடைக்க மர்ம நபர் முயற்சி - கையும் களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.ஒன்று உள்ளது.
வங்கி ஏ.டி.எம்.மை உடைக்க மர்ம நபர் முயற்சி - கையும் களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
x
ஈரோடு, ஸ்டோனி பிரிட்ஜ் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்நிலையில், இங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கல்லை கொண்டு ஏ.டி.எம்.  இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பொதுமக்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த மர்ம நபரை பிடித்து வைத்துக்கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், மர்ம நபரை கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் கர்நாடகாவை சேர்ந்த சந்திரகுமார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் ஏடிஎம் மில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.

Next Story

மேலும் செய்திகள்