செல்போன் வெடித்து இளைஞர் படுகாயம் : மோட்டார் சைக்கிளில் செல்போனில் பேசியபடி சென்றபோது விபத்து

ஓசூர் அருகே செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
செல்போன் வெடித்து இளைஞர் படுகாயம் : மோட்டார் சைக்கிளில் செல்போனில் பேசியபடி சென்றபோது விபத்து
x
ஓசூர் அருகே செல்போன்  வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். புலியரசி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி சென்றுள்ளார். அப்போது ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்து பேசியபடி அவர் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென செல்போன் வெடித்து சிதறியதில் ஆறுமுகத்திற்கு காது, முகம் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி வழங்கி, பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்