நீட் விவகாரத்தில் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் - தங்கமணி

நீட் தேர்வு விலக்கு கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனுவுக்கு 'வித் ஹெல்ட்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்
நீட் விவகாரத்தில் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் - தங்கமணி
x
நீட் தேர்வு விலக்கு கோரி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனுவுக்கு 'வித் ஹெல்ட்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டங்களை துவக்கி வைத்தார்.குமாரபாளையம் நகராட்சியில் நடைபெறும் புதைவட மின் திட்டத்தால், மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றார். நீட் விலக்கு கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனுவுக்கு, 'வித் ஹெல்ட்' என்று மத்திய அரசு பதிலளித்துள்ளதாக கூறிய அவர், இது தொடர்பாக எதிர்க்கட்சி  தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்