"நீட்டை வைத்து தி.மு.க அரசியல் செய்கிறது" - அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் செய்ய ஒன்றுமில்லாததால், நீட் தேர்வை வைத்து அ.தி.மு.க அரசு மீது தி.மு.க பழி போடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
x
அரசியல் செய்ய ஒன்றுமில்லாததால், நீட் தேர்வை வைத்து அ.தி.மு.க அரசு மீது தி.மு.க பழி போடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். ராயப்பேட்டையில் நடைபெற்ற நபார்டு வங்கியின் 39ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்பதே அ.தி.மு.க அரசின் நிலைப்பாடு என்றார். இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர், சட்டம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் போதிய விளக்கம் அளித்திருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்