"கட்டிங் போட காசு கொடுத்தால் தான் கட்டு போடுவேன்" - பரவும் அரசு மருத்துவமனை ஊழியரின் வீடியோ

பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் மது அருந்த பணம் கொடுத்தால் தான் சிகிச்சை அளித்து கட்டு போடுவேன் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கட்டிங் போட காசு கொடுத்தால் தான் கட்டு போடுவேன் - பரவும் அரசு மருத்துவமனை ஊழியரின் வீடியோ
x
பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் மது அருந்த பணம் கொடுத்தால் தான் சிகிச்சை அளித்து கட்டு போடுவேன் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவை பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், நரசிம்ம‌நாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர் ஜெயபால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பணம் கேட்பதாக பல நாட்களாக புகார் எழுந்து வந்த‌து. ஆனால், அதன் மீது நடவடிக்கை இல்லாத‌தால், இளைஞர் ஒருவர், ஜெயபால் லஞ்சம் கேட்பதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதன் பிறகாவது அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்