ஆண்டிப்பட்டி : 12 ஆண்டுகளாக இடிந்து கிடக்கும் தரைப்பாலம் - வாகன ஓட்டிகள் அவதி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 12 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத தரைப்பாலத்தால் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி : 12 ஆண்டுகளாக இடிந்து கிடக்கும் தரைப்பாலம் - வாகன ஓட்டிகள் அவதி
x
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 12 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத தரைப்பாலத்தால் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும், தேனி தெப்பம்பட்டி - கண்டமனூர் சாலையில், உள்ள தரைப்பாலம் கடந்த 12 ஆண்டுகளாகவே இடிந்து கிடப்பதாக தெரிகிறது.  இதனால், விளை பொருட்களை எடுத்து செல்லமுடியாமல் விவசாயிகளும், கனரக வாகனங்களை கொண்டு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே விரைவில் பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்