குழந்தை விற்பனை வழக்கு : 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில், இடைத்தரகர்கள் 3 பேரின் ஜாமின் மனுவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில், இடைத்தரகர்கள் 3 பேரின் ஜாமின் மனுவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈரோட்டை சேர்ந்த கருமுட்டை இடைத்தரகர்கள் அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோருக்கு ஜாமின் வழங்க சிபிசிஐடி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி இளவழகன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே, இந்த வழக்கில் கைதான செவிலிய உதவியாளர் சாந்தி, ஜாமின் கோரி நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
Next Story