தொழிலதிபர்களை மிரட்டி பல லட்சம் ரூபாய் வசூல் - அதிமுக பிரமுகர் கைது

சென்னை தண்டையார்பேட்டையில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபர்களை மிரட்டி பல லட்சம் ரூபாய் வசூல் - அதிமுக பிரமுகர் கைது
x
தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்த அறிவழகன் அப்பகுதி அதிமுக வட்ட பொருளாளர்.  இந்நிலையில் தண்டையார் பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் புதியதாக வீடு கட்டுபவர்களிடமும் தொழிற்சாலை தொடங்குபவர்களிடமும் அவர் மிரட்டி பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரபல தனியார் ஹோட்டல் நிறுவனம் தண்டையார் பேட்டையில் புதிய கிளையை தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த ஹோட்டல் உரிமையாளர் அறுமுகசாமியை தொடர்பு கொண்டு பேசிய அறிவழகன், 75 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால், புதிய கிளையை திறக்க விடமாட்டேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆறுமுகசாமி அளித்த புகாரின் பேரில் அறிவழகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த மூன்றாண்டுகளாக சென்னை  முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை உள்ள பெரிய பெரிய நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலித்திருப்பது விசாரணையில்தெரியவந்தது. அறிவழகனின் சகோதரர் காவல்துறையில் பணியற்றி வருவதால்,  அவர், காவலர் குடியிருப்பில் தங்கிக்கொண்டே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்