திருச்செந்தூர் அருகே எதிரே வந்த கார் மீது லாரி மோதி விபத்து - ஆசிரியை உட்பட 5 பேர் காயம்

திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி அனல் மின் நிலையப் பணிகளுக்கு கல் ஏற்றி சென்ற லாரி எதிரே வந்த கார் மோதிய விபத்தில் ஆசிரியை உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
திருச்செந்தூர் அருகே எதிரே வந்த கார் மீது லாரி மோதி விபத்து - ஆசிரியை உட்பட 5 பேர் காயம்
x
திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி அனல் மின் நிலையப் பணிகளுக்கு கல் ஏற்றி சென்ற லாரி, எதிரே வந்த கார் மோதிய விபத்தில், ஆசிரியை உட்பட 5 பேர் காயமடைந்தனர். திசையன்விளையை சேர்ந்த தொழிலதிபர் கிங்ஸ்லி, அவது மனைவி ஆசிரியை விமலா, மாமனார் தாமஸ், மகள்கள் அன்ஸி மகள் சைனி ஆகிய 5 பேர்  திசையன் விளையிலிருந்து தூத்துக்குடியிலுள்ள உறவினர் வீட்டிற்கு காரில் வந்த கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மோதியதில் 5 பேரும் காயமடைந்தனர். ஓட்டுநர் மது அருந்தி விட்டு லாரியை ஓட்டி வந்ததே, விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்