11, 12ம் வகுப்பில் தமிழ் - ஆங்கிலம் ஆகிய 2ல் ஒரு பாடம் - வரும் கல்வியாண்டு முதல் அமல்?

11 மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிப்பாடங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும் முறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.
11, 12ம் வகுப்பில் தமிழ் - ஆங்கிலம் ஆகிய 2ல் ஒரு பாடம் - வரும் கல்வியாண்டு முதல் அமல்?
x
பொதுத்தேர்வுகளில் மீண்டும் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 9 மற்றும் பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களில் இரு தாள்களுக்கு பதிலாக ஒரே தாள் தேர்வு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது, 9 மற்றும் பத்தாம் வகுப்புகளில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 பாடங்களும் தலா இரண்டு தாள்கள் தேர்வு எழுதும் முறை உள்ளது. இதை ஒரே தாளாக மாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதேப்போல 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரு மொழிப் பாடங்களுக்கு பதிலாக ஒரே மொழிப்பாடம் தேர்வு செய்யும் முறையை அமல்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை பரிந்துரை செய்துள்ளது. இது அமலுக்கு வரும்பட்சத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஒரு மொழிப்பாடத்தை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம். இதனால் 11 மற்றும் 12ஆம் வகுப்பில் 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக மாற்றம் பெறும் என்றும் பாடத்துக்கு 100 மதிப்பெண் வீதம் 600 ஆக உள்ள மொத்த மதிப்பெண் அளவு இனி 500 மதிப்பெண் ஆக மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த பரிந்துரை தொடர்பாக முழுமையான ஆய்வுக்குப் பிறகு வரும் கல்வி ஆண்டில் இவற்றை தமிழக அரசு அமல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்