நடிகர் சங்க நிலம் மோசடியாக விற்பனை என புகார் : 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில்,நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நடிகர் சங்க நிலம் மோசடியாக விற்பனை என புகார் : 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய  உயர் நீதிமன்றம் உத்தரவு
x
கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக விற்பனை செய்ததாக நடிகர் விஷால், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 2017ஆம் ஆண்டு புகார் அளித்து இருந்தார். விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் விஷால் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இந்த வழக்கில் 3 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்