நடிகர்கள் ராதாரவி, சரத்குமார் மீது விஷால் தொடர்ந்த வழக்கு : 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர்கள் ராதாரவி, சரத்குமார் மீது விஷால் தொடர்ந்த வழக்கு : 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய  உயர் நீதிமன்றம் உத்தரவு
x
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலம் இருந்தது. அதை, நடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவி வகித்த ராதாரவி, தலைவர் பதவியில் இருந்த சரத்குமார் உள்ளிட்டோர், போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக விற்பனை செய்ததாக நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் நடிகர் விஷால், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 2017ம் ஆண்டு புகார் அளித்து இருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், வழக்குப் பதிவு செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிய உத்தரவிட்டது. சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோருக்கு எதிராக  காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவினர், கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறிய விஷால், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இந்த வழக்கில் 3 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணையை அந்த  மாவட்ட எஸ்.பி. கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்