ஆசனவாயில் மறைத்து ரூ. 28 லட்சம் மதிப்பு தங்கம் கடத்தல்
மதுரை விமான நிலையத்தில் உடலுக்குள் மறைத்து 2 பயணிகள் கடத்தி வந்த 28 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் உடலுக்குள் மறைத்து 2 பயணிகள் கடத்தி வந்த 28 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து ஸ்ரீலங்கன் ஏர்வேய்ஸில் வந்த, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராவுத்தர் கனி என்பவரது மகன் அப்துல் ரகிம் ரியாஸிடம் சோதனை செய்ததில், 3 பொட்டலங்களாக எடுத்து வந்த 600 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் சின்ன தொண்டியை சேர்ந்த முனிஸ்வரன் மகன் பார்த்திபனிடம் சோதனை செய்ததில் ஆசனவாய் மூலம், 4 பொட்டலங்களாக 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை உருக்கி தங்கம் தனியாக பிரித்து எடுக்கப்பட்டன. இந்த நூதன கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
Next Story