ஆசனவாயில் மறைத்து ரூ. 28 லட்சம் மதிப்பு தங்கம் கடத்தல்

மதுரை விமான நிலையத்தில் உடலுக்குள் மறைத்து 2 பயணிகள் கடத்தி வந்த 28 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆசனவாயில் மறைத்து ரூ. 28 லட்சம் மதிப்பு தங்கம் கடத்தல்
x
மதுரை விமான நிலையத்தில்  உடலுக்குள்   மறைத்து 2 பயணிகள் கடத்தி வந்த 28 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து ஸ்ரீலங்கன் ஏர்வேய்​ஸில் வந்த, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராவுத்தர் கனி என்பவரது மகன் அப்துல் ரகிம் ரியாஸிடம் சோதனை செய்ததில், 3 பொட்டலங்களாக எடுத்து வந்த 600 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் சின்ன தொண்டியை சேர்ந்த முனிஸ்வரன் மகன் பார்த்திபனிடம் சோதனை செய்ததில் ஆசனவாய் மூலம், 4 பொட்டலங்களாக 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை உருக்கி தங்கம் தனியாக பிரித்து எடுக்கப்பட்டன. இந்த நூதன கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்