நடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து பைப்லைன் அமைத்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நடைபயணமாக சென்று கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் முடிந்த பின்னர் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்தார்
Next Story