தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் துவக்கம்

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமை துவங்குகிறது.
தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் துவக்கம்
x
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில், அதிமுகவும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. இந்த தேர்தலில் அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த 4 தொகுதிகளுக்கும் வரும் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மே 2 ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளும், மே 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

Next Story

மேலும் செய்திகள்