சதுரகிரி பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளதா? - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

மதுரை சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்க சாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை செய்து தரக்கோரி சென்னை திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் இராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
சதுரகிரி பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளதா? - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
x
மதுரை சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்க சாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை செய்து தரக்கோரியும் ,உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சென்னை திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் இராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர், மாதந்தோறும் இந்த கோவிலுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று வனத்துறைக்கு கேள்வி எழுப்பினர். சதுரகிரி மலைப் பகுதியில் வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்