ஏப்ரல் 18 செயல்படும் பள்ளி, தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

ஏப்ரல் 18 ஆம் தேதி, தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18 செயல்படும் பள்ளி, தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
x
ஏப்ரல் 18 ஆம் தேதி, தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் எச்சரித்துள்ளார். வாக்குச் சாவடிகளுக்கு கணிணி மூலமாக  சுழற்சி முறையில் முகவர்களை தேர்ந்தெடுக்கும் பணி சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அப்போது, செய்தியாளரிடம் பேசிய பிரகாஷ், புதிதாக 67 ஆயிரத்து 727 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 11 பார்வையாளர்கள்  வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்