ஒரே நாளில் 3 கோடி ரூபாய் பறிமுதல் : தேர்தல் அதிகாரிகள் அதிரடி

கடலூர் பெரிய காட்டு பாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட, தேர்தல் அதிகாரிகள் பண்ருட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் கார் மூலம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 97 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
ஒரே நாளில் 3 கோடி ரூபாய் பறிமுதல் : தேர்தல் அதிகாரிகள் அதிரடி
x
கடலூர் புதுச்சேரி சாலையில் பெரிய காட்டு பாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட, தேர்தல் அதிகாரிகள் பண்ருட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் கார் மூலம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 97 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோல் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் என்ற இடத்தில் நடந்த வாகன தணிக்கையின் போது  மணிவண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் தொகையை அதிகாரிக்ள பறிமுதல் செய்தனர். விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு கடலூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்