பொள்ளாச்சி : டோக்கனாக வழங்கப்பட்ட டம்மி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பொள்ளாச்சியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு டம்மி நோட்டுக்கள், டோக்கனாக வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி : டோக்கனாக வழங்கப்பட்ட டம்மி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
x
பொள்ளாச்சியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு டம்மி நோட்டுக்கள், டோக்கனாக வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் ஏபிடி ரோட்டில் உள்ள பள்ளி ஒன்றில் வாக்காளர்களுக்கு 50,100, 2 ஆயிரம் ரூபாய் டம்மி நோட்டுகளை அதிகமுவினர் வழங்கியதாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்ததும் டம்மி நோட்டுகளை பெற்று ஒரிஜினல் நோட்டுகள் வழங்கப்படும் என கூறப்பட்டதால் ஏராளமானோர் பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். இதனையடுத்து அங்கு சென்ற தேர்தல் அதிகாரிகள் டம்மி நோட்டுக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்