தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு

தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
x
தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மணல் லாரி மோதி பெண் ஒருவருக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதிமக்கள் குவாரியில் உள்ள கொட்டகைகளுக்கு தீ வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து செய்தி தந்தி டி.வியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை அடுத்து குவாரிக்கு சீல் வைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், விசாரணை நடத்த ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்