வங்கி பணம் ரூ.2.5 கோடி பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை
திருச்சியில் இரண்டரை கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
திருச்சியில் இரண்டரை கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் பகுதியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும்படை குழுவினர் வங்கி வாகனத்தில் இருந்த இரண்டரை கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேல் முன்னிலையில் எண்ணப்பட்டு, சீல்வைத்து மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதேநேரம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுச்செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்
Next Story