கோவை சிறுமி கொலை வழக்கு - பாலியல் வன்கொடுமை செய்தவரிடம் விசாரணை

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 6 நாட்களுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
கோவை சிறுமி கொலை வழக்கு - பாலியல் வன்கொடுமை செய்தவரிடம் விசாரணை
x
கோவை துடியலூர் பன்னிமடை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 25ம் தேதி கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.இதனையடுத்து காணாமல் போன சிறுமி 26ம் தேதி அவரது வீட்டின் அருகேயுள்ள குறுக்கு சந்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பின்னர் நடைபெற்ற பிரேத பரிசோதணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து
13 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில், கொலை நடந்து 6 நாட்களுக்கு பிறகு உலியம்பாளையம் பகுதியை சேர்ந்த  சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.அடிக்கடி பன்னிமடை கிராமத்துக்கு வரும் சந்தோஷ்குமார் அந்த சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.சந்தோஷ் குமாரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனது மகன் தவறு செய்யவில்லை - சந்தோஷ்குமாரின் தந்தை

சம்பவம் நடந்த அன்று தனது மகன், தன்னுடன் வீட்டிலேயே இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமாரின் தந்தை தெரிவித்துள்ளார். தனது மகன் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்