5,970 வழக்கறிஞர் இடைநீக்க உத்தரவு நிறுத்திவைப்பு : உயர்நீதிமன்றத்தில் பார் கவுன்சில் உத்தரவாதம்

ஐந்தாயிரத்து 970 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்த உத்தரவை இரண்டு வாரத்துக்கு நிறுத்தி வைப்பதாக உயர் நீதிமன்றத்தில் பார் கவுன்சில் உத்தரவாதம் அளித்துள்ளது.
5,970 வழக்கறிஞர் இடைநீக்க உத்தரவு நிறுத்திவைப்பு : உயர்நீதிமன்றத்தில் பார் கவுன்சில் உத்தரவாதம்
x
ஐந்தாயிரத்து 970 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்த உத்தரவை இரண்டு  வாரத்துக்கு நிறுத்தி வைப்பதாக உயர் நீதிமன்றத்தில் பார் கவுன்சில்  உத்தரவாதம் அளித்துள்ளது. இடைநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பார் கவுன்சில் தரப்பு வழக்கறிஞர், சந்தா செலுத்திய பின் வழக்கறிஞராக தொடரலாம் என நோட்டீசில் உள்ளதை சுட்டிக் காட்டினார். இதை பதிவு செய்த  நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 11 -ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்