சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா மகா தேரோட்டம் : பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தரிசனம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி பெருவிழாவின் மகா தேரோட்டம் நடைபெற்றது
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி பெருவிழாவின் மகா தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது.இன்று மகா தேரோட்டத்தை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு தொடர்ந்து, திருத்தேரில் சுவாமி எழுந்தருளினார்.இதனையடுத்து பக்தர்கள் வடம் பிடிக்க தேர் புறப்பட்டது.இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
Next Story