வஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை : அ.தி.மு.க. எம்.பி அன்வர்ராஜாவிடம் விசாரணை

சென்னை மண்ணடியில் உள்ள வஃபு வாரிய அலுவலகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட சிபிஐ குழு சோதனை மேற்கொண்டு வருகிறது
x
மதுரை வஃபு வாரிய  கல்லூரி பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக  நேற்று ராமநாதபுரத்தில் உள்ள வஃபு வாரிய தலைவரான  அ.தி.மு.க. எம்.பி அன்வர்ராஜாவிடம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை வஃப்பு வாரிய அலுவலகத்தில்அன்வர்ராஜாவிடம் அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த சோதனை குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில், சிபிஐ அதிகாரிகளின் திடீர் சோதனை,  அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்