பொள்ளாச்சி பாலியல் சம்பவம்- தொடரும் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன
பொள்ளாச்சி பாலியல் சம்பவம்- தொடரும் போராட்டம்
x
* திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள எம்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

* நெல்லையில் மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் மீதும், குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.


* கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புக்கு திரும்புமாறு பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

* பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 14 நீதிமன்றங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிகளை புறக்கணித்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்