இளைஞர்களை கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர் : உடன் இருந்த நபரை தாக்காமல் விட்டது ஏன்...? - போலீசார் சந்தேகம்

ஒமலூர் அருகே மூன்று இளைஞர்களை கொலை செய்ய வந்த கூலிப்படையினர், பெட்ரோல் பங்க் அருகே நடத்திய கொடூர தாக்குதல், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
இளைஞர்களை கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர் : உடன் இருந்த நபரை தாக்காமல் விட்டது ஏன்...? - போலீசார் சந்தேகம்
x
ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த சூர்யா, தனது நண்பர்களுடன் கமலாபுரம் மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது சூர்யாவின் மற்றொரு நண்பர் சரவண‌ன் அங்கு வந்துள்ளார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த10 பேர் கொண்ட கும்பல் அவர்களை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பி, காரில் ஏறி சென்றுகொண்டிருந்தபோது, சிக்கனம்பட்டி அருகே திடீரென சரவண‌ன் காரை நிறுத்தியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த கூலிப்படை கும்பல் மீண்டும் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சூர்யா, ரவிக்குமார் ஆகியோருக்கு மண்டை உடைந்து அங்கேயே மயக்கமடைந்துள்ளனர். அங்கிருந்த மக்கள் பிடிக்க முயன்றபோது, கூலிப்படையினர் தப்பி ஓடிவிட்டனர். இந்த இரண்டு தாக்குதல்களிலும், சரவண‌னை மட்டும் கூலிப்படை கும்பல் தாக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் உடன் இருந்தபடியே சரவண‌ன் காட்டி கொடுத்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்