லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
x
திண்டுக்கல்லின் நத்தத்தில், அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அதேப் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து, 12 ஆயிரம் மதிப்பிலான கேரள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்