பெண்ணின் விவரங்களை வெளியிட்டது,அப்பட்டமான விதிமீறல் - அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

வேறு புகார்கள் வராமல் இருக்க விடப்படும் மறைமுக அச்சுறுத்தல்
பெண்ணின் விவரங்களை வெளியிட்டது,அப்பட்டமான விதிமீறல் - அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
பொள்ளாச்சி வன்கொடூரம் தொடர்பாக புகார் தந்த பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்களுடன் சி.பி.ஐ. விசாரணைக்காக அரசாணை வெளியிட்டிருப்பது, அரசின் அப்பட்டமான விதிமீறல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் - விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் உள்ள நிலையில், இந்த செயல் இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இனி புகார் தராமல் இருப்பதற்காக விடப்படும் மறைமுக அச்சுறுத்தல் ஆகும் என்றும்  சமூக வலைதளத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்