பொள்ளாச்சி குற்றம் - கட்சி தலைவர்கள் கண்டனம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்புடைய அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
பொள்ளாச்சி குற்றம் - கட்சி தலைவர்கள் கண்டனம்
x
பொள்ளாச்சி  பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும்,இதில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் அனைவரும் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரம் இருப்பதால், உடனடியாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க குற்றவாளிகளை அடையாளம் காட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வர வேண்டும் என்றும் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்