காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு
x
ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உயிரிழந்த செய்தி மனவருத்தம் தருவதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 20 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்