நள்ளிரவில் டெம்போவை திருடிய மர்ம கும்பல்....

ஓமலூரில் நள்ளிரவில் வேன் மூலம் டெம்போவை திருடிய மர்ம கும்பலை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
நள்ளிரவில் டெம்போவை திருடிய மர்ம கும்பல்....
x
ஓமலூரில் நள்ளிரவில் வேன் மூலம்  டெம்போவை திருடிய மர்ம கும்பலை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். காமலாபுரத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் ஓமலூரில் வாகன பழுது பார்க்கும் பட்டறையை வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் பட்டறை முன்பு நிறுத்தப்பட்டிருந்த டெம்போவை ரெக்கவரி வேன் மூலம் மர்ம கும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது.  ஆனால் எதிர்பாராத விதமாக, அந்த வேன் எதிரே வந்த வாகனம் மீது மோதியுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு திரண்ட பொதுமக்கள், டெம்போ திருடப்பட்டதை அறிந்து மர்ம நபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்