திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான சீனியர் கபடி போட்டி நடந்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான சீனியர் கபடி போட்டி நடந்தது. அமெச்சூர் கபடி கழகம், தைப் பொங்கல் விழாக் குழு மற்றும் திருச்செங்கோடு விளையாட்டு குழு இணைந்து நடத்திய இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆண்கள் பிரிவில் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் கலந்துகொண்டன. ஆண்கள் பிரிவில், திருப்பூர் மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில், திண்டுக்கல் மாவட்ட அணியும் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இருந்து தேசிய அளவிலான கபடி போட்டிக்கு தமிழக அணிக்காக 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
Next Story