வாகன சோதனையில் ஆய்வாளருடன் வாக்குவாதம் : ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகை
வாகன சோதனையில் ஆய்வாளருடன் வாக்குவாதம் : ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகை
திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் நேற்று திண்டுக்கல் - பழனி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். ஒரு காரை சோதனை செய்ததில், அதில் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது. இது தொடர்பாக காரில் இருந்த இரண்டு பேரை விசாரணைக்காக ஆய்வாளர் அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வாக்குவாதம் செய்ததுடன் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, தங்கள் கட்சி நிர்வாகி அல் ஆசிப்பை ஆய்வாளர் துன்புறுத்தியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர் காவல் நிலையத்தில் கூடினர்.
Next Story