பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு போட்டி
கடலூர் மாவட்டம், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், காணும் பொங்கலை ஒட்டி, நடைபெற்ற படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கடலூர் மாவட்டம், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், காணும் பொங்கலை ஒட்டி, நடைபெற்ற படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஒற்றைத் துடுப்பு படகு, இரட்டைத் துடுப்பு படகு, மூன்று துடுப்பு படகு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 6 படகுகள் பங்கேற்றன. பிச்சாவரம் ஆற்றில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைப்பெற்ற படகு போட்டியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story