6 ஏ.டி.ஜி.பி.க்களுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்க தமிழக அரசு பரிந்துரை
ஆறு கூடுதல் காவல்துறை இயக்குநர்களை டி.ஜி.பி. அந்தஸ்த்துக்கு உயர்த்த உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
ஆறு கூடுதல் காவல்துறை இயக்குநர்களை டி.ஜி.பி. அந்தஸ்த்துக்கு உயர்த்த உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 1986 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்த அதிகாரிகள் ஜாபர் சேட், ஸ்ரீ லட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ் குமார் ஜா, தமிழ்செல்வன், அசிஷ் பென்க்ரா உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் டி.ஜி.பி-யாக பதவி உயர்வு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
Next Story