"கஜா புயல் பாதிப்பு - பணிகள் தொடர்கின்றன" - அமைச்சர் பாஸ்கர்
தமிழக கதர் மற்றும் கிராம தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் பாஸ்கர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக கதர் மற்றும் கிராம தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் பாஸ்கர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர் . அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயல் அதிகம் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில், புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
Next Story