புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக குவிந்த மக்கள்...

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று இரண்டாவது நாளாக மனு அளிக்க வந்தவர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால்  மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று செய்தி பரவியதால், நேற்று,  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ஆட்சியர் அலுவலகத்தில்,  ஆயிரக்கணக்கானோர் குவியத் தொடங்கினர். அவர்களை போலீசார் அலுவலக வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் விரட்ட தொடங்கியதால் பரபரப்பான சூழல் உருவானது.  

Next Story

மேலும் செய்திகள்