நகைக்கடையில் போலி நகையை மாற்ற முயற்சி செய்த 4 பேர் கைது

தர்மபுரியில் நகைக்கடை ஒன்றில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பர்தா அணிந்து வந்த செம்பருத்தி உட்பட நான்கு இளம்பெண்கள், நான்கு சவரன் செயினைக் கொடுத்து, புதிதாக நகை வாங்க முயன்றனர்.
நகைக்கடையில் போலி நகையை மாற்ற முயற்சி செய்த 4 பேர் கைது
x
தர்மபுரியில் நகைக்கடை ஒன்றில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பர்தா அணிந்து வந்த செம்பருத்தி உட்பட நான்கு இளம்பெண்கள், நான்கு சவரன் செயினைக் கொடுத்து, புதிதாக நகை வாங்க முயன்றனர். அப்போது நகையை ஆய்வு செய்தபோது அது போலி நகை எனத் தெரிந்தது. இதையடுத்து, அநதப் பெண்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, தர்மபுரி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த நான்கு பெண்களையும் போலீஸார் பிடித்தனர். அவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதில் செம்பருத்தி என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற 3 பேர் சிறுமிகள் என்பதால் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்