கிணற்றுக்குள் தவறி விழுந்த மாடு : ஒரு மணி நேரம் போராடி மீட்கப்பட்ட மாடு
திருச்செங்கோடு அடுத்த கருவேப்பம்பட்டியில், கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருச்செங்கோடு அடுத்த கருவேப்பம்பட்டியில், கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த கருவேப்பம்பட்டி நாராயணி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாயி என்பவரின் மாடு, மேய்ச்சலுக்கு சென்றபோது, 200 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கிணற்றில் இறங்கி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி, கயிறு கொண்டு இழுத்து மாட்டை மீட்டனர். கருவுற்று இருந்த மாட்டை லாவகமாக மீட்ட திருச்செங்கோடு தீயணைப்பு படையினரை ஊர்மக்கள் பாராட்டினர்.
Next Story