சட்டப்பேரவையில் மறைந்த தலைவர்கள் வாஜ்பாய், கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோர் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் மறைந்த தலைவர்கள் வாஜ்பாய், கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்
x
சட்டப்பேரவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பரிதி இளம் வழுதி, எல்.சந்தானம், நாகூர் மீரான் உள்ளிட்ட 12 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பேரவை தலைவர் தனபால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி,  தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் , நெல் ஜெயராமன், 5 ரூபாய் மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரன், கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை முன்வைத்தார். இதனை தொடர்ந்து துணை முதலமைச்சரும், பேரவை முன்னவருமான பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவு குறித்து பேசி இரங்கல் தீர்மானங்களை முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்