பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்
தை மாதம் நெருங்கி விட்டாலே அதிக அளவிலான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
தை மாதம் நெருங்கி விட்டாலே அதிக அளவிலான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்தாண்டும் பக்தர்கள் திரளாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.இந்த நிலையில் மணப்பாறையில் போலீசார் பக்தர்களை அழைத்து, ஆபத்தில்லா பாதயாத்திரை மேற்கொள்ளும் வகையில். அவர்களது சட்டையின் பின்பக்கம் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி விட்டனர். மேலும் பிஸ்கட், தண்ணீர் பாட்டில் கொடுத்து அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர்.
Next Story