அரசு பேருந்தில் திடீரென்று உயிரிழந்த பயணி - சடலத்துடன் பேருந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஓட்டுநர்

சேலம் அருகே அரசு பேருந்தில் பயணித்த ஒருவர் திடீரென்று உயிரிழந்ததால்,அவரது உடலை பேருந்திலேயே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஓட்டுநரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.
அரசு பேருந்தில் திடீரென்று உயிரிழந்த பயணி - சடலத்துடன் பேருந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஓட்டுநர்
x
சேலம் அருகே அரசு பேருந்தில் பயணித்த ஒருவர் திடீரென்று உயிரிழந்ததால்,அவரது உடலை பேருந்திலேயே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற  ஓட்டுநரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர். 

சேலத்திலிருந்து, கடலூருக்கு, சென்ற பேருந்தில், பயணித்த, ஜாபர் சித்திக் அலி என்பவர், திடீரென்று உயிரிழந்தார். இது குறித்து ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் யாரும் வராததால், பேருந்து ஓட்டுநர் மதியழகன், பயணிகளை வேறு பேருந்தில் ஏற்றி விட்டு, அதே பேருந்தில் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேலும் இறந்தவரின்  சட்டைப்பையில் இருந்த, தொலைபேசி எண்கள் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் உடலை எடுத்து செல்ல காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யாததால் ஓட்டுநரின் மனிதாபிமானம் மிக்க செயலை அனைவரும் பாராட்டினர்

Next Story

மேலும் செய்திகள்