வள்ளியூரில் புதரான பூங்காவை சீரமைக்கும் பணி துவக்கம்...

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பராமரிப்பின்றி காணப்பட்ட பூங்காவில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.
x
வள்ளியூர் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட காந்தி காலணியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட சிறுவர் பூங்கா, போதிய பராமரிப்பின்றி குப்பைகள் கொட்டப்பட்டு செடிகள் மற்றும் முட்புதர்கள் அடர்ந்து காணப்பட்டது. பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை, தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதன் எதிரொலியாக பூங்காவில் அடர்ந்துள்ள செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றப்பட்டு, சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்