எரிவாயு சிலிண்டர் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 3 பேர் பலி

கொடைக்கான‌ல் அருகே எரிவாயு சிலிண்ட‌ர் வெடித்த‌தில் ஒரே குடும்ப‌த்தை சேர்ந்த‌ 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிவாயு சிலிண்டர் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 3 பேர் பலி
x
கொடைக்கானல் அருகேயுள்ள, மங்களம் கொம்பு மலை கிராமத்தை சேர்ந்த, கணேசன் தற்போது திண்டுக்க‌ல் அருகே வசித்து வருகிறார். இந்த நிலையில், பள்ளி விடுமுறைக்காக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அவர் மங்களம் கொம்பு கிராமத்திற்கு வந்துள்ளார். குளிர் அதிகமாக இருந்ததையடுத்து  நேற்று இரவு அவர், வீட்டில் ஹீட்டர் உபயோகப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 

இந்த நிலையில் இன்று அதிகாலையில் மின்கசிவு ஏற்பட்டு ஹீட்டர் வெடித்து தீ பரவியதில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த கணேசன், அவரது மணைவி மஞ்சுளா, மகள் விஷ்ணுப்பிரியா ஆகியோர் சம்வ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்