வேலைக்கு போலந்து நாட்டிற்கு சென்ற கணவர் குத்தி கொலை - ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய மனைவி

போலந்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த மனைவி, கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலைக்கு போலந்து நாட்டிற்கு சென்ற கணவர் குத்தி கொலை - ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய மனைவி
x
போலந்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த மனைவி, கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள சாம்பசிவபுரத்தை சேர்ந்த வெங்கடேசன், 6 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து போலந்தில் கடந்த 45 நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், வெங்கடேசன் கத்தியால் குத்தப்பட்டு இறந்துவிட்டதாக அவரது மனைவி கலைச்செல்விக்கு திடீரென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி, கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தனது கணவர் உடலை மீட்டுதருமாறு கதறி அழுதார். 

Next Story

மேலும் செய்திகள்